என் பார்வைக்குள்
நான் ஒன்று
ஒளித்து வைத்திருக்கிறேன்
என்னவென சொல்
என்றாய்..
அடடா...!
என் இதயம்
என்னிடமில்லையே என்றேன்..
ஆமாம்...! என்பதாய்
விழித்தாய்..!
அடிப் பெண்ணே...
நீ எங்கே நிற்கிறாய்
என பார்த்தாயா? என்றேன்
ஒரே இருட்டாக
இருக்கிறது என்றாய்.
நீயிருந்துமா ? என்றேன்.
செல்ல சிணுங்களோடு எங்கே
இருக்கிறேன் சொல்லுங்களேன் என
நெஞ்சில் இடித்தாய்...
நீயே பார் என கண்களை
காட்டினேன் ...
பார்த்ததும் குளிர்ந்து விட்டாயோ?
கண்கள் குளிர்ச்சியாக
இருக்கிறது என்றேன்...
இல்லை ,
சூடாக இருக்கிறேன் என்றாய்...
ஏன்? என் கண்களுக்குள்
உன்னை வைத்தது
பிடிக்கவில்லையா ...?
இல்லையடா மடையா ...!
நெஞ்சுக்குள் வைத்திருந்தால்
எப்பொழுதும் சாய்ந்து
கொள்வேன் அல்லவா ..?
என்றாய்...
இவ்வளவு தானா?
செல்லமே..!
என் இதயத்துடிப்பால்
இரவில் உன் தூக்கம்
கெடும் அல்லவா ?
அதுமட்டுமல்ல
கண்ணில் வைத்ததால்
நான் பெரிய பாக்கியசாலி
தெரியுமா? என்றேன்...
எப்படி? எப்படி?
எப்படி? என்றாய்...
அவசரமாய்...
பொறுமையாய் கேள்
சொல்லுகிறேன் என்றேன்...
அதற்கும் சிணுங்கலாய்
சொல்லுடா என்றாய்...
உனக்காய் காற்றுவீசும்
சாமரங்கள் என் இமைகள்..!
ம்ஹூம்...
என் பார்வை எப்பொழுதும்
உன் மீதே..!
ம்ஹூம்...
இரவிலும்
என் முன் நீயே...!
ம்ஹூம்...
ஆனந்தக்கண்ணீர் கூட
வருவதில்லை நீயிருப்பதால்...!
பேச்சில்லை உன்னிடம்...
இவற்றை விட முக்கியமான
ஒன்று... எப்பொழுதும்
உன்னை அணைத்திருப்பேனே...!
சொல்லி முடிப்பதற்குள்
உன்னைக் காணவில்லை...?
எங்கே...? அட என்
கால்களில்,
தேவதையே...!
இது காலில்
விழும் நேரமல்ல
காதலில் விழும்
நேரமென உன்னை
அணைக்க வந்த என்னை
முடியாது போடா
பொறுக்கியென
தள்ளிவிட்டு
ஓடுகிறாயே...!
பட்டாம்பூச்சி
பறப்பது போலே...!
14-05-2006 @ 10.45 PM